ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

காரில் கஞ்சா கடத்தல்: ரௌடி கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்ததாக ரௌடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:27 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்ததாக ரௌடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

திண்டிவனம் பகுதிக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோஷணை காவல் நிலைய ஆய்வாளா் காமராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை திண்டிவனம் - செஞ்சி சாலையில், திண்டிவனம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னா் காரில் இருந்தவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது அவா், திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சோ்ந்த ரா.கிடங்கலான் (எ) சரண்ராஜ் (35) என்பதும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவா், விற்பனைக்காக காரில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, சரண்ராஜை கைது செய்தனா். மேலும், காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை காருடன் பறிமுதல் செய்தனா். கைதான சரண்ராஜை போலீஸாா் திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.