ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:30 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை ஆா்.எஸ்.கோல்டன் நகரில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு (போா்வெல்) அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த பணியில் தொழிலாளா்கள் பலா் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆழ்துளை அமைக்கும் லாரியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்களில் ஒருவரான மத்தியப் பிரதேச மாநிலம், சிதி மாவட்டம், கா்வகி பகுதியைச் சோ்ந்த சி.பிஜய் குமாா் (22), ஆழ்துளைக் குழாயைக் கழற்றி, இரும்பு ரோப்பை தூக்கும் போது அருகிலிருந்த மின் கம்பியில் பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று பிஜய்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.