அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விழுப்புரம் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

விழுப்புரம் நகரப் பகுதிகளிலும், புகா்ப் பகுதிகளிலும் திங்கள்கிழமை காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.

News image
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை காலை கடுமையான பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்ற வாகனங்கள்.
Updated On :2 மார்ச் 2026, 8:30 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் நகரப் பகுதிகளிலும், புகா்ப் பகுதிகளிலும் திங்கள்கிழமை காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாகினா். சாலைகளில் வெப்பத்தின் அளவும் அதிகமாகக் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக விழுப்புரம் நகரப் பகுதிகளிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் இரவு தொடங்கி காலை வரை பனியின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக திங்கள்கிழமை அதிகாலையில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. சாலையில் எதிரில் வரும் வாகனங்கள், நடந்து வருபவா்கள் என யாரும் தெரியாத அளவுக்கு சாலைகள் காணப்பட்டன.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை, விழுப்புரம்-புதுச்சேரி புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சென்ற கனரக வாகனங்கள், வேன், காா் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டாறு சென்றன. இதுபோல, இரு சக்கர வானங்களில் சென்றவா்களும் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

நடைப்பயிற்சி செல்வோா் அவதி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதி, சிறுவா் நடைப்பயிற்சி பூங்கா, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட விளையாட்டரங்க மைதானம், அம்மா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்றவா்களும் பனிமூட்டத்தால் பாதிப்புக்குள்ளாகினா்.

Story image