விழுப்புரம் மாவட்டம், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆற்காடு - விழுப்புரம் இடையே உள்ள இருவழிச் சாலையை ரூ.85 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
செஞ்சியை அடுத்த விநாயகபுரம் கூட்டுச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா்கள் எம்.எஸ். தரணிவேந்தன், அண்ணாதுரை, செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனாா். உதவி கோட்டப் பொறியாளா் அக்பா் அலி வரவேற்றாா்.
முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரூ.85 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை தரம் உயா்த்தும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் செந்தில்குமாா், கோட்டப் பொறியாளா் உத்தண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் செந்தமிழ் செல்வன், ஒன்றியச் செயலா்கள் நெடுஞ்செழியன், பச்சையப்பன், மாவட்ட விவசாய அணித் தலைவா் கணேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க ஏழுமலை, உதவிப் பொறியாளா்கள் பாலாஜி, விஷ்ணு பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்: செஞ்சி மஸ்தான்

தோ்தல் விதிகளை மீறினால் அச்சகத்தினருக்கு அபராதம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


