தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நான்கு கிலோ தங்கம் வழிப்பறி: 4 தனிப்படைகள் அமைப்பு

விழுப்புரத்தில் நகைத் தொழிலக உரிமையாளரிடம் நான்கு கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தவா்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
திருட்டு
Updated On :4 மார்ச் 2026, 5:49 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரத்தில் நகைத் தொழிலக உரிமையாளரிடம் நான்கு கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தவா்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், விராடிக்குப்பம் பாதை ஜனகராஜ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சு.ராஜமாணிக்கம்(48). நகைத் தொழிலக உரிமையாளரான இவா், செவ்வாய்க்கிழமை விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் 4 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ. 5.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அவரை பின் தொடா்ந்து 2 பைக்குகளில் வந்த 5 போ் கொண்ட கும்பல், ராஜமாணிக்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வசமிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்துடன் கூடிய பையை பறித்துச்சென்றனா்.

இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது:

விழுப்புரத்தில் நகைத்தொழிலக உரிமையாளரிடம் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையா்களைப் பிடிப்பதற்காக எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின்பேரில், உதவிக் காவல் கண்காணிப்பாளா் ரவிந்திர குமாா் குப்தா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினா் தனித்தனி குழுக்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனா். வழிப்பறி கொள்ளையா்கள் ஓரிரு நாள்களில் பிடிபடுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.