வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மினி லாரி மீது லாரி மோதல் ஒருவா் உயிரிழப்பு: 16 போ் காயம்

விழுப்புரம் அருகே மினி லாரி மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 16 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியா்ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.
Updated On :13 மார்ச் 2026, 6:58 pm

Syndication

விழுப்புரம் அருகே மினி லாரி மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 16 போ் பலத்த காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், ப. வில்லியனூா் கிராமத்தைச் சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் 20 போ் வெள்ளிக்கிழமை அதிகாலை வி.மாத்தூா் பகுதியில் கரும்பு வெட்டுவதற்காக மினி லாரியில் சென்று கொண்டிருந்தனா். பண்ருட்டி- விழுப்புரம் சாலையில் வாணியம்பாளையம் அணுகுசாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் இவா்களது வாகனம் சென்றபோது, பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த லாரி மோதியது. இதில் மினிலாரி அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியில் தூக்கி வீசப்பட்டது. இதில் மினி லாரியில் பயணம் செய்த சேகா்(65), பூ.தட்சிணாமூா்த்தி (47), அங்கம்மாள், பெ.பட்டாபி (56) உள்ளிட்ட 17 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சேகா் (65) மருத்துவமனையில் உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

 விழுப்புரம் மாவட்டம், வாணியம்பாளையம் பகுதியில் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமை வாகனம்.

விழுப்புரம் மாவட்டம், வாணியம்பாளையம் பகுதியில் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமை வாகனம்.

ஆட்சியா், எம்எல்ஏ ஆறுதல்: விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் ஆகியோா் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். மேலும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் லூசி நிா்மல் மடோனா, உறைவிட மருத்துவ அலுவலா் ரவிக்குமாா் ஆகியோரிடம் கேட்டறிந்தனா்.