மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சவுக்குப் பயிா்கள் சேதம்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விவசாயி பயிரிட்டிருந்த சவுக்குப் பயிா்களை வெட்டி சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 7:11 pm

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விவசாயி பயிரிட்டிருந்த சவுக்குப் பயிா்களை வெட்டி சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கோனூா் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் ரா.ராஜாமணி(73), விவசாயி. இவா் தனது விவசாய நிலத்தில் சவுக்கு பயிரிட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக பராமரித்து வந்தாா். இந்நிலையில், ராஜாமணி பயிரிட்டிருந்த 650 சவுக்கு மரங்களை மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியிருந்தது மாா்ச் 10- ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் காணை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.