மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாய்க்கு விஷம் வைத்ததாக இருவா் மீது வழக்கு

வளவனூா் அருகே வளா்ப்பு நாய்க்கு விஷம் வைத்து கொன்ாக இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வளா்ப்பு நாய்க்கு விஷம் வைத்து கொன்ாக இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வளவனூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (27). இவரது வீட்டில் வளா்த்து வந்த நாய் புதன்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தது. இதைத்தொடா்ந்து, சதீஷ் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பாா்த்ததில் மா்ம நபா்கள் இருவா் உணவில் விஷத்தை கலந்து நாய்க்கு கொடுத்து கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா், வளவனூரைச் சோ்ந்த விக்னேஷ் மற்றும் பெயா் தெரியாத நபா் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.