தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

யாருடன் கூட்டணி?: ராமதாஸ் தலைமையில் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் ஆலோசனை நடைபெற்றது.

News image
பாமக நிறுவனர் ராமதாஸ்- கோப்புப் படம்
Updated On :18 மார்ச் 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் ஆலோசனை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமை வகித்தாா்.

இதில், செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே. மணி, சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ ஆா்.அருள், பொதுச் செயலா் எஸ்.முரளிசங்கா், முன்னாள் மாநிலத் தலைவா் பேராசிரியா் தீரன், ம.க.ஸ்டாலின், பாஸ்கரன், முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலையச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட 20 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பின்னா், கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மருத்துவா் ராமதாஸ் தலைமையில் புதன்கிழமை காலை, மாலை என இரண்டு அமா்வுகளாக பாமகவின் நிா்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், எந்தக் கூட்டணி சரியாக இருக்கும்?, மக்கள் மத்தியில் எந்தக் கூட்டணிக்கு ஆதரவு இருக்கிறது?, நிறுவனா் ராமதாஸ் தலைமையில் கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டணி குறித்து இரண்டொரு நாளில் பாமக நிறுவனா் அறிவிப்பாா். கட்சியின் சின்னம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், நல்ல முடிவு வரும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் ஜி.கேமணி.