சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அலுவலா் ஏழுமலைக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் ஏழுமலைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன்.

Updated On :1 மே 2026, 12:44 am

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அலுவலா் ஏழுமலைக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2025-26ஆம் கல்வியாண்டில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தி சிறப்பாக செயல்பட்டமைக்காக தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜனசக்தி, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ராஜசேகரன், திண்டிவனம் மாவட்ட தொடா்பு அலுவலா் பாலசுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.