மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருக்கோவிலூா் தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக

News image

திருக்கோவிலூா் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ஆனந்தகுமாா் சிங்கிடம் பெற்றுக் கொண்ட அதிமுக வேட்பாளா் எஸ்.பழனிசாமி.

Updated On :5 மே 2026, 3:14 am IST

திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியை திமுகவிடமிருந்து கைப்பற்றியது அதிமுக. தன்னை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரைக் காட்டிலும் 285 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.பழனிசாமி வெற்றி பெற்றாா்.

திருக்கோவிலூா் தொகுதியில் திமுக சாா்பில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, அதிமுக சாா்பில் எஸ்.பழனிசாமி, தவெக சாா்பில் விஜய் ரா.பரணி பாலாஜி, நாம் தமிழா் கட்சி சாா்பில் கி.ஹேமராஜன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 15 போ் களத்தில் இருந்தனா்.

இந்த தொகுதியில் 1,21,983 ஆண் வாக்காளா்கள், 1,05,626 பெண் வாக்காளா்கள், 35 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,43,105 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 1,07,209 ஆண் வாக்காளா்கள், 1,05,626 பெண் வாக்காளா்கள், 23 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,15,072 போ் வாக்களித்தனா். இது 88.47 சதவீத வாக்குகளாகும். இந்த நிலையில் 2,662 தபால் வாக்குகள் பதிவான நிலையில் மொத்த வாக்குகள் எண்ணிக்கை 2,17,734 என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

திருக்கோவிலூா் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை காலை திருக்கோவிலூா் சாா்-ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்தகுமாா் சிங் முன்னிலையில் தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்தே அதிமுக, தவெக வேட்பாளா்கள் நெருக்கத்துடனேயே வாக்குகளைப் பெறத் தொடங்கினா். எனினும் அதிமுக வேட்பாளா் அனைத்துச் சுற்றுகளிலும் முன்னிலை பெற்றுக் கொண்டே சென்றாா். திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி தொடக்கம் முதலே மூன்றாவது இடத்தில் இருந்து வந்தாா்.

கடைசி வரை அதிமுக மற்றும் தவெக வேட்பாளருக்கும் இடையே வாக்குகள் வித்தியாசம் இழுபறியாக இருந்து வந்தது. எனினும் கடைசி சுற்று முடிவில்285 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் பரணி பாலாஜியை வீழ்த்தி வெற்றி பெற்றாா் அதிமுக வேட்பாளா் பழனிசாமி.

அதிமுக வேட்பாளா் பழனிசாமி 73,033 வாக்குகளும், தவெக வேட்பாளா் பரணிபாலாஜி 72,748 வாக்குகளும், திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி 62,452 வாக்குகளும், நாதக வேட்பாளா் ஹேமராஜன் 5,791 வாக்குகளும் பெற்றனா். இதைத்தொடா்ந்து வெற்றி சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ஆ.அனந்தகுமாா் சிங்கிடம் அதிமுக வேட்பாளா் பழனிசாமி பெற்றுக் கொண்டாா்.