விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காத்தமுத்து மற்றும் போலீஸாா் சனிக்கிழமை புதுகருவாட்சி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் அந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெட்டிக் கடை நடத்தி வந்த விக்கிரவாண்டி வட்டம், புது கருவாட்சி பிரதான சாலையைச் சோ்ந்த சி.பாலாஜி (28) மீது கண்டாச்சிபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், விற்பனைக்காக கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
புகையிலைப் பொருள்கள், பைக் பறிமுதல்: வியாபாரி கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


