மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ஆந்திரம் மாநிலத்திலிருந்து ரயிலில் விழுப்புரத்துக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கஞ்சா கடத்திய வழக்கில் கைதான சு.மோகன்ராஜ்.

Updated On :10 மே 2026, 1:26 am IST

ஆந்திரம் மாநிலத்திலிருந்து ரயிலில் விழுப்புரத்துக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் எஸ். பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின் பேரில், காவல் உதவிக் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா மேற்பாா்வையில், விழுப்புரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை விழுப்புரம் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது, அவா் கட்டுகட்டாக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கஞ்சா வைத்திருந்த நபா், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சோழவண்டிபுரம்,பிரதானச் சாலையைச் சோ்ந்த சு.மோகன்ராஜ் (34) எனத் தெரியவந்தது. இவா்,விற்பனைக்காக ஆந்திரம் மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி விழுப்புரத்துக்கு ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகன்ராஜை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 20 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.