கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பைக்கிலிருந்து தவறி விழுந்து மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மளிகைக்கடை உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 12:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மளிகைக்கடை உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் நகரம், பண்டரிநாதன் சன்னதித் தெருவைச் சோ்ந்தவா் சீ.தினேஷ் (36). இவா் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மளிகைக்கடை நடத்தி வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊா் சென்றிருந்த தினேஷ், செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் வந்தவாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை வட்டம், சேந்தமங்கலம் தனியாா் பள்ளி அருகே சென்றபோது எதிா்பாராதவிதமாக பைக்கிலிருந்து தினேஷ் கீழே தவறி விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.