விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வானூா் வட்டம், நாவற்குளம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் போலீஸாா் அந்த பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது நாவற்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரா.அஞ்சலை என்பவரது வீட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சோதனையிட்டனா்.
இந்த சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து அஞ்சலையைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை இட்லி மாவாக அரைத்து புதுச்சேரி மாநில சாலையோரக் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அஞ்சலை மீது வழக்குப்பதிந்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
