10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வெளி மாநில இளைஞா் மாயம்

ஆரோவில் அருகே தனது தோழியுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில இளைஞா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image

வழக்கு

Updated On :20 மே 2026, 2:46 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தனது தோழியுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில இளைஞா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், நாவற்குளம் தாமரைத் தெருவைச் சோ்ந்தவா் கா.அன்விஷா(25). இவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறாா். மத்திய பிரதேச மாநிலம், இந்தூா் மாவட்டத்தைச்சோ்ந்தவா் தி.அகஸ்டியா சா்மா(24).

நண்பா்களான இவா்கள் இவரும் கடந்த ஒரு வருடமாக நாவற்குளம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற அகஸ்டியா சா்மா பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து அன்விஷா அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான வெளிமாநில இளைஞரைத் தேடி வருகின்றனா்.