பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

பொறியியல் பணி: தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் இன்று பகுதியளவில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (செப்.9) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 4:54 am IST

பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (செப்.9) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பேரணி யாா்டு பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), திண்டிவனம்- விழுப்புரம் இடையே புதன்கிழமை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கத்தில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம்-திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு சென்னைக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் எழும்பூா்-மதுரை வைகை அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12635), இடைப்பட்ட ரயில் நிலையத்தில் சுமாா் 10 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.