FOLLOW US

ON GOOGLE DISCOVER

பொறியியல் பணிகள்: ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

train time change

கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 6:39 pm IST

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் என். ஜெயந்த் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் பேரணி - மயிலம் யார்டுக்கு இடையேயான பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ரயில் இயக்கப் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பர் 3 ,4,5,6,7 ஆகிய தேதிகளில் திண்டிவனம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பர் 3,4,5,6,7 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - திண்டிவனம்இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 20665), செப்டம்பர் 3,4, 5 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்களும், சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும்சென்னை எழும்பூர் - மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12635), செப்டம்பர் 3,4,5 தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 110 நிமிடங்களும் , செப்டம்பர் 6 ஆம் தேதி சுமார் 15 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் சென்னை தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 06109) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 95 நிமிஷங்களும், சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்படும் சென்னை தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06059) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 90 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு,பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - காக்கிநாடா துறைமுகம் கிர்கார் விரைவு ரயில் (வண்டி எண் 17656), செப்டம்பர் 3,5 ஆகிய தேதிகளில் சுமார் 15 நிமிஷங்களும், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17654) செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 140 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - திருப்பதி பயணிகள் விரைவு ரயில் (வண்டி எண் 16112) செப்டம்பர் 4- ஆம் தேதி சுமார் 25 நிமிஷங்களும், 6-ஆம் தேதி சுமார் 30 நிமிஷங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Summary

Engineering works Changes to train operations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.