டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்த மாத இறுதியில் கூட்டணி அறிவிப்பு: ஜி.கே.வாசன்

வரும் சட்டப்பேரவை எந்தக் கட்சியுடன் கூட்டணி அறிவிóப்பை இந்த மாத இறுதியில் வெளியிடுவேன் என்று என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.  சென்னையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:52 pm

அரவிந்தன்

வரும் சட்டப்பேரவை எந்தக் கட்சியுடன் கூட்டணி அறிவிóப்பை இந்த மாத இறுதியில் வெளியிடுவேன் என்று என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.  சென்னையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என யாரையும் பாதிக்காத வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

 வரும் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இந்த மாத இறுதியில் அறிவிப்பேன் என்றார்.3 அணியிடம் பேச்சுவார்த்தை: அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெறும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

 ஆனால், அதிமுக அணியில் தமாகா கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 மேலும், ஜி.கே.வாசனை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நேரில் சந்தித்து, பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர்.

 ஆனால், இதுவரை வாசன் முடிவு தெரிவிக்கவில்லை என்கின்றனர்.  இதற்கிடையில், தமாகாவில் உள்ள திமுக ஆதரவு தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 காங்கிரஸýக்கு அளிக்கப்படும் தொகுதிக்கு நிகராக தமாகாவுக்கும் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இதை திமுக தலைமை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.  மூன்று அணிகளுடன் தமாகா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எதிலும், இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.