ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்

தூத்துக்குடியில் உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் அலுவலகம் உள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2016, 4:00 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் அலுவலகம் உள்ளது.

இந்த மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் மாதாநகர். லுர்தம்மாள்புரம், எம்.ஜி.ஆர் நகர், தாளமுத்துநகர், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4000க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினராக உள்ளனர். இங்கு உள்ள மகளிர் குழு பெண்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்தாக தூத்துக்குடி சட்டமன்ற தேர்தல் அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவராஜன் தலைமையில் அதிகாரிகள் விரைந்து வந்து மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் அலுவலகத்தில் சோதனை மேற்க்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மகளிர் குழு பெண்களை அதிகாரிகள் சிறை பிடித்து மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் ஓருங்கிணைப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகளிர் குழு பெண்களுக்கு தொழில் கடனாக 10ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

ஆனால் தேர்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது குழு பெண்களுக்கு கடன் வழங்க கூடாது என தெரிவித்து கடன் வழங்குவதற்காக வைத்திருந்த 5லட்சத்திற்கு மேற்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.