"கங்கமாதா சமுதாயத்தினருக்கு தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும்'
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கங்கமாதா சமுதாய மக்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கங்கமாதா சமுதாய மக்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அபிகாரா செளடய்யா மகாசபை தலைவர் அம்பிகா ஜலகார் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அம்பிகா, பெஸ்தா, கோலி, கப்பலிகா உள்ளிட்ட 39 பிரிவுகளைக் கொண்ட கங்கமாதா சமுதாய மக்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் வாய்ப்புத் தர வேண்டும்.
மாநிலத்தில் சுமார் 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 18 தொகுகளில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எங்கள் சமுதாயத்தினருக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியை அபிகாரா செளடய்யா மகாசபை ஆதரிக்க முடிவு செய்துள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.