சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ்: பினராயி விஜயன்
சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ் என்று பினராயி விஜயன் தெரிவித்தது பற்றி...
சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ் என்று என்று கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் சனிக்கிழமை (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராகவும்ம், நடிகரகவும் இருந்த கே. பாக்யராஜ் (73 வயது) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
புகழ்பெற்ற இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரமடைந்தேன். தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான முத்திரை பதித்த அவர், தனது சிறந்த படைப்புகள் மூலம் மலையாளிகளின் அன்பையும் பெற்றார்.
அவரது மறைவு திரைப்பட உலகிற்கும் கலாச்சாரத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அஞ்சலி என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
Kerala Assembly Leader of the Opposition Pinarayi Vijayan stated on Saturday (June 27) that the passing of Director Bhagyaraj is an irreparable loss.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.