வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன்!
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் நேரில் பார்வையிட்டது பற்றி...
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் வியாழக்கிழமை (ஜூலை 9) நேரில் பார்வையிட்டார்.
வயநாடு மாவட்டம், மெப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்கள் எம்.வி. கோவிந்தன் மற்றும் எம்.வி. ஜெயராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமுக்கு சென்ற பினராயி விஜயன் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களின் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Former Chief Minister and current Leader of the Opposition Pinarayi Vijayan visited the landslide-affected areas in Kerala's Wayanad district in person on Thursday (July 9).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.