முகப்பு
பெங்களூரு

வாகனச் சோதனை: ரூ.9 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.9 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:05 am IST
பகிர்:

உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.9 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மண்டியா ஊரகம், மண்டியா-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை போலீஸார், தேர்தல் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெங்களூரு ஜிகினியைச் சேர்ந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்: பெலகாவி மாவட்டம் கானபுரா சுங்கச்சாவடியில் காரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 5 லட்சம் ரொக்கப்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இளைஞர் ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments