கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடியிருப்புகளுக்கு அருகே கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து
மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடியிருப்புகளுக்கு அருகே கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் கூறியது:
பாலமேட்டில் குடியிருப்புகள், பள்ளி, விவசாய நிலங்கள் அருகே கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்பகுதியில 200 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.