"வங்கிச் சேவைக்கு தேவையான நவீன தொழில்நுட்பம் தேவை'
வங்கிகளின் சேவைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று
வங்கிகளின் சேவைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று எஸ் வங்கியின் நிதி பிரிவு மூத்தத் தலைவர் ரஜத் மொங்கா தெரிவித்தார்.
பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், வங்கிச் சேவைக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியியல் பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை அளித்து, அவர் பேசியது:-
வங்கிச் சேவைகள் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், ஒரு சில நேரங்களில் கடுமையான பிரச்னைகளைச் சந்திக்க நேரிகிறது. இதனை கருத்தில் கொண்டு, பொறியியல் மாணவர்கள், தனியார் மென்பொறியாளர்களிடையே வங்கிச் சேவையில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கப் போட்டியை வைத்தோம்.
6 ஆயிரம் பேர் 200 குழுக்களாகப் பிரிந்து 100 நாள்களில் உருவாக்கிய தொழில்நுட்பங்களை டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் காட்சிப்படுத்தினர். இதில் சிறந்து விளங்கிய 10 தொழில்நுட்பங்களை உருவாக்கிய மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
வங்கிகளின் சேவைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க மாணவர்களுக்கு ஊக்கமளிக்க எஸ் வங்கி உறுதி பூண்டுள்ளது. அடுத்த ஆண்டுகளிலும் இதுபோன்று தொழில்நுட்பங்கள் உருவாக்குவதற்கான போட்டிகள் நடத்தப்படும். சிறந்த வங்கிச் சேவையால் நாட்டின் பொருளாதாரம் உயரும். வங்கிச் சேவையில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க எஸ் வங்கி முடிவு செய்துள்ளது என்றார் ரஜத் மொங்கா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.