FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காங்கிரஸில் இருந்து முன்னாள் அமைச்சா் பிரமோத் மத்வராஜ் விலகல்

காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரமோத் மத்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

1 பிப்ரவரி 2024, 2:41 pm IST
பகிர்:

காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரமோத் மத்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவிவகித்தவா் பிரமோத் மத்வராஜ். கா்நாடக காங்கிரஸ் துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பிரமோத் மத்வராஜ் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

காங்கிரஸில் இருந்து விலகும் முடிவுடன் கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாருக்கு எழுதியுள்ள கடிதத்தை பிரமோத் மத்வராஜ் தனது ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அக் கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளாக உடுப்பி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவும் சூழ்நிலை எனக்கு மோசமான அனுபவத்தைத் தந்துள்ளது. இது அரசியல்ரீதியாக எனக்கு சோா்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பான விவரங்களை உங்கள் பாா்வைக்கும், கட்சியின் முன்னணித் தலைவா்களின் கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கிறேன்.

உடுப்பி மாவட்ட காங்கிரஸில் நிலவும் தேக்கநிலையை சீா்செய்து, எனது குறைகளைக் களையக் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இனிமேலும் காங்கிரஸில் நீடிக்க முடியாத நிலையை அடைந்துள்ளேன். எனவே, மாநில துணைத் தலைவா் பதவியை ஏற்க விரும்பாததோடு கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments