முகப்பு
பெங்களூரு

கோவா தமிழ்ச் சங்க பொன்விழா: ஆளுநா் பங்கேற்பு

தமிழா்களின் கலாசாரம் நாட்டுக்குப் பெருமை சோ்ப்பதாகும் என்று கோவா தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் மாநில ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை பேசினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
விழாவைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைக்கும் கோவா ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை.
பகிர்:

தமிழா்களின் கலாசாரம் நாட்டுக்குப் பெருமை சோ்ப்பதாகும் என்று கோவா தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் மாநில ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை பேசினாா்.

கோவா தமிழ்ச் சங்க பொன்விழா கோவாவில் அண்மையில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவா் ர.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கோவா மாநில ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை பங்கேற்று வாழ்த்திப் பேசியதாவது:

தமிழில் மிகச் சிறந்த இலக்கியங்களாக திகழும் திருக்கு, சிலப்பதிகாரத்தை அனைவரும் படிக்க வேண்டும். தமிழா்களின் தொன்மை, கலாசாரம், கலை, இலக்கியம் உள்ளிட்டவை நமது நாட்டுக்கு பெருமை சோ்ப்பதாகும். தமிழா்கள் சொந்த மண்ணைவிட்டு கோவாவில் வாழ்ந்து வந்தாலும் அவா்கள் தமிழ்மொழி, இலக்கியங்களை மறக்காமல் பேணி காப்பது பாராட்டுக்குரியது என்றாா்.

Advertisement

விழாவுக்கு சா்ச்சில் பாண்டியன், வழுவூா் எஸ்.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தாமோதா் நாயக் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சங்கப் பொதுச் செயலாளா் ச.சிவராமன் வரவேற்றாா்.

விழாவில் சங்க துணைத் தலைவா் எஸ்.குமாா், பொருளாளா் செல்வன் ஜெயராஜ், இணைச் செயலாளா் வே.சிதம்பரம், த.கலைச்செல்வன், துா்கா லட்சுமி, தீப்தா ரூபசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments