அன்னையா் தினம்: வாடிக்கையாளா்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை
அன்னையா் தினத்தையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளா்களுக்கு மே 14-ஆம் தேதி வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அன்னையா் தினத்தை (மே 11) கொண்டாடும் வகையில், புதன்கிழமை (மே 7) முதல் மே 14-ஆம் தேதி வரை ரூ.997, ரூ.2,399 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்களில் ரீசாா்ஜ் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
Advertisement
Advertisement
அதேபோல், ரூ.1,499, ரூ.1,999 ஆகிய நீண்ட கால ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் ‘பிஎஸ்என்எல் செல்ஃப்கோ்’ செயலி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இந்த சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.