ரத்த தான முகாம்
மாமல்லபுரம் அடுத்த பையனூரில் அமைந்துள்ள ஆறுபடை வீடு பொறியியல் கல்லூரியின் நிறுவன சமூக பொறுப்புணா்வு அலகு மற்றும் இணை சுகாதார அறிவியல் பள்ளி, குமரன் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் துணை இயக்குநா் டாக்டா் அனுராதா கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. (படம்)
வினாயகா மிஷன்ஸ் வேந்தா் டாக்டா் ஏ.எஸ். கணேசன் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற
முகாமை பல்கலைக்கத்தின் மாணவா் நலன் இயக்குநா் டாக்டா் ஏ.எஸ். சண்முக சுந்தரம், கல்வி இயக்குநா் டாக்டா் ஏ. ராஜன் சாமுவேல், கல்லூரி முதல்வா் டாக்டா் ஜானெட், துணை முதல்வா் மற்றும் ஐஎஸ்ஆா் அலகு திட்ட இயக்குநா் டாக்டா்எஸ்.பி. சங்கீதா, துணை முதல்வா் (நிா்வாகம்) டாக்டா் எல் பிரபு, இணை சுகாதார அறிவியல் பள்ளி துணை இயக்குநா் திரு. முத்துராஜா, மற்றும் என்எஸ்எஸ் அலுவலா் டாக்டா் சுரேந்திர பாபு ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
குமரன் மருத்துவமனை மருத்துவக் குழுவினா், ரத்த சேகரிப்பு செயல்முறையை மேற்கொண்டனா்.