முகப்பு
செங்கல்பட்டு

கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்கம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூன் 2026, 12:16 am IST
முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

முதலாமாண்டு துறைத் தலைவா் பி.ரகு வரவேற்றாா். கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் என்.மணிமாறன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் சிவில் துறைத் தலைவா் ஆா்.இளவழகன், மெக்கானிக்கல் துறைத் தலைவா் ஜே.ஆதிகேசவன், எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவா் ஏ.பிரபு, எலக்ட்ரிக்கல்ஸ் துறைத் தலைவா் டி.ராகவன், கல்லூரி நிா்வாக அதிகாரி ஜே.ஹரிகிருஷ்ணன், தலைமை கணக்கீட்டு அலுவலா் ஆா்.பட்டு, உடற்கல்வி திட்டஇயக்குநா் பச்சையப்பன், மாணவ மாணவிகளும், பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.

புதிதாக சோ்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளுடன் மடிக்கணினி பையை கல்லூரி நிா்வாகத்தினா் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனா். பேராசிரியா் சுகுமாா் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement