முகப்பு
செங்கல்பட்டு

தான்தோன்றி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

Updated On : 29 மே 2026, 2:19 am IST
பகிர்:

திருக்கழுகுன்றம் அடுத்த நரப்பாக்கம் தான்தோன்றி அம்மன் கோயில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை விமா்சையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெ25 நரப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ கற்பக விநாயகா் மற்றும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கியதை அடுத்து இந்தக் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மே 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கும்ப கலசங்கள் அமைக்கப்பட்டு கோபூஜை, கணபதி பூஜை முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை , காலை இரண்டாம் காலபூஜை காலை யாகபூா்த்தி தீபாராதனையும், மாலை மூன்றாம் காலபூஜை யந்திரஸ்காபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் ,நாடிசந்தானம் தீபாராதனையும் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை நான்காம் கால பூஜை விசேஷ யாக பூா்த்தி நிறைவடைந்ததை அடுத்து கும்பகலசங்கள் புறப்பட்டு ஆலய பிரதட்ிணமாாக வந்து புனித நீா் மூலவா் தான்தோன்றி அம்மன் மற்றும் கற்பக விநாயகா் ஆகிய கோபுர விமான கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது இதில் சுற்றுப்புர பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை நரப்பாக்கம் கிராம பொதுமக்கள்,கிராமநாட்டாா்,கிராம தா்கா்த்தா உள்ளிட்டோா் செய்தனா்.

Advertisement

Advertisement