முகப்பு
சென்னை

நர்சிங் மாணவி தற்கொலை

அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவி மண்ணெண்ணெய் குடித்து சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.

Updated On : 13 மே 2013, 3:47 am IST
பகிர்:

அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவி மண்ணெண்ணெய் குடித்து சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த விவரம்:

வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்தவர் சபரீஷ். தூத்துக்குடியை சேர்ந்த நர்சிங் மாணவி சரண்யாவுடன் சபரீஷுக்கு பழக்கம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

பின்னர் சபரீஷ்- சரண்யா இருவரும் திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தினர். இதுபற்றி சரண்யாவின் பெற்றோருக்கு 6 மாதத்திற்கு பின்புதான் தெரியவந்தது. திருமணத்துக்கு பின்னர் சரண்யா தொடர்ந்து படித்து வந்தார். இந்நிலையில் கணவன்- மனைவியிடையே மே 9-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.

இதில் மனவேதனையடைந்த சரண்யா மண்ணெண்ணெயை குடித்தார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரண்யா உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.டிஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.