முகப்பு
சென்னை

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

செல்லிடப்பேசி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய எஸ்டிவி -118 என்ற அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியையும், ஒரு ஜி.பி. டேட்டா சலுகையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 3:23 am IST
பகிர்:

செல்லிடப்பேசி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய எஸ்டிவி -118 என்ற அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியையும், ஒரு ஜி.பி. டேட்டா சலுகையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அகில இந்திய அளவில் தனது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு எஸ்டிவி ரூ.118 (சிறப்புக் கட்டண வவுச்சர்) என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இதில் அளவில்லாத உள்ளூர், வெளியூர் குரல் அழைப்புகள், தேசிய ரோமிங் வசதியில் ரிங் பேக் டோன், ஒரு ஜி.பி. டேட்டா ஆகியவை 28 நாள்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
குறைந்த அளவே டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியை இச்சலுகை மூலம் பெறமுடியும். பிஎஸ்என்எல் தமிழக வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments