முகப்பு
தமிழ்நாடு

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனை பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து.

Updated On : 25 ஜூன் 2026, 10:35 am IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்.
பகிர்:

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், திமுகவின் சட்டப்பேரவைக் கொறடாவுமான எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர், அன்புச் சகோதரர் எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.

ஆளுங்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

summary

Former Chief Minister M.K. Stalin stated on Thursday (June 25) that the DMK is not a movement that cowers before the ruling party's threats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments