இன்று சித்த மருத்துவ தினம்: சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
நாடு முழுவதும் சித்த மருத்துவ தினம் புதன்கிழமை (டிச. 26) கடைப்பிடிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் சித்த மருத்துவ தினம் புதன்கிழமை (டிச. 26) கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக, சென்னையில், புதன்கிழமை நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத யோசோ நாயக், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் கனகவள்ளி கூறியதாவது:
அகத்தியர் பிறந்த நட்சத்திரமான மார்கழி ஆயில்ய நாளானது சித்தா தினமாக கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாவது ஆண்டாக அந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதையொட்டி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களும், நிகழ்ச்சிகளும் நாடு முழுவதும் நடத்தப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சிறப்புப் பேரணியும் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.