மாணவர் ஆராய்ச்சித் திட்டங்கள் இந்திய தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சேர்க்கும்'
பொறியியல் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இந்திய உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று பிரதமரின் கூடுதல்
பொறியியல் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இந்திய உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலர் பிரமோத் குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் இந்திய தகவல்தொழில்நுட்பம் வடிவமைப்பு, உற்பத்தி கல்வி நிறுவனத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், 149 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி அவர் பேசியது:
அதிநவீன செல்லிடப்பேசி கட்டமைப்பு, வடிவமைப்பு, தயாரிப்பு, செயற்கை அறிவாற்றல், ரோபோட்டிக், தானியங்கி வாகன இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாடு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள் இந்திய அறிவாற்றலுக்கும்,பிரதமரின் உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் என்றார் பிரமோத்குமார் மிஸ்ரா.
சென்னை ஐஐடி முன்னாள் தலைவரும், கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவருமான எம்.எஸ். ஆனந்த், கல்வி நிறுவன இயக்குநர் பன்ஷிதர் மஜ்ஜி உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.