முகப்பு
சென்னை

பூம்புகார் நிறுவனம் சார்பில் தீபாவளி ஆடைகள் கண்காட்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், தீபாவளி கண்காட்சி ஆடைகள், துணி வகைகள் விற்பனை

Updated On : 6 நவம்பர் 2018, 2:50 am IST
பகிர்:


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், தீபாவளி கண்காட்சி ஆடைகள், துணி வகைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 
தமிழக அரசின் கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக்கழகமான பூம்புகார் நிறுவனம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கண்காட்சி நடத்தப்படுகிறது. நிகழாண்டில் தீபாவளி கண்காட்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதில், காஷ்மீர் சால்ஸ், செட்டிநாடு, ஆந்திர கலம்காரி, வாராணசி, மகேஸ்வரி புடவை வகைகள், மதுரை சுங்குடி சேலைகள், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் துணி வகைகள், சுடிதார் வகைகள், குழந்தைகளுக்கான துணி வகைகள், மேஜை விரிப்புகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
வரும் 9-ஆம் தேதி வரை நடத்தப்படும் இந்த கண்காட்சிக்குப் பார்வையாளர்கள் தினமும் காலை 10 மணி முதல் 8 மணி வரை அனுமதிக்கப்படுவர். தீபாவளி சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, அனைத்து பொருள்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments