குட்டையில் மூழ்கி மாணவி பலி
சென்னை அருகே செம்மஞ்சேரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவா (40), ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் ஆனந்தி (14) 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சென்னை அருகே செம்மஞ்சேரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவா (40), ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் ஆனந்தி (14) 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24-ஆம் தேதி ஒட்டியம் பாக்கத்திலுள்ள கல்லுக்குட்டையில் குளிக்கச் சென்ற அவர் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் மூழ்கினார். கடந்த இரண்டு நாள்களாகத் தேடியும் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மாணவியின் சடலம் குட்டையில் மிதந்தது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.