தொழிலதிபர் வீட்டில் ரூ.11 லட்சம் திருட்டு
சென்னை நொளம்பூர் மேற்கு முகப்பேர் சர்வீஸ் சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன்(40), தொழிலதிபரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, ஏலகிரிக்கு சுற்றுலா சென்று விட்டார்.
சென்னை நொளம்பூர் மேற்கு முகப்பேர் சர்வீஸ் சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன்(40), தொழிலதிபரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, ஏலகிரிக்கு சுற்றுலா சென்று விட்டார். இந்த நிலையில் சனிக்கிழமை அந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக வேலைக்காரப் பெண் வந்து பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்டார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கும், நொளம்பூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ. 11 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.