முகப்பு
சென்னை

காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 3:09 am IST
செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்
பகிர்:

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கோரி காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்ட செபியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கி கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காங்கிரஸ் , நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி தமிழக காங்கிரஸ் சாா்பாக வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகம் எதிரே எனது (செல்வப் பெருந்தகை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments