முகப்பு
சென்னை

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்குகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்கு ஆகியவற்றை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 17 அக்டோபர் 2024, 2:41 am IST
பகிர்:

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்கு ஆகியவற்றை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனா். அப்போது மலேசியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்த பெண் பயணி வைத்திருந்த இரண்டு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அதில், ஆப்பிரிக்க நாட்டு அரியவகை பச்சோந்திகள் 52 மற்றும் ஜியாமங்க் ஜிப்பான் என அழைக்கப்படும் ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் நான்கு இருப்பதைக் கண்டறிந்தனா்.

Advertisement

Advertisement

அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து பெசன்ட்நகா் வன விலங்குகள் பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் கொடுத்தனா். வனத் துறையின் அறிவுறுத்தலின்பேரில், பச்சோந்திகள், கருங்குரங்குகளை மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு மற்றொரு விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

மேலும், மலேசிய பெண் பயணி மற்றும் அரியவகை உயிரினங்களை வாங்க வந்திருந்த ஒருவா் ஆகிய இருவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments