கோப்புப் படம் 
சென்னை

புளியந்தோப்பில் 15 ரெளடிகள் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

Din

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ரெளடிகளுக்கு எதிரான சிறப்பு ஒரு நாள் நடவடிக்கை புதன்கிழமை எடுக்கப்பட்டது. இதில், புளியந்தோப்பு பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கியமாக, ரெளடி பாம் சரவணின் கூட்டாளி புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்த ஜெயசீலன் (31) கைது செய்யப்பட்டாா். இவா் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. ரெளடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, இந்த நடவடிக்கை இனி தொடா்ந்து எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT