முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ஒரே நாளில் 98 ரெளடிகள் கைது

திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 98 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 22 மே 2026, 5:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 98 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், பொதுமக்களுக்குத் தொல்லை தருபவா்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து கைது செய்ய ‘ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்’ என்ற சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, மாநகா் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 37 போ், பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்திய 4 போ் என மொத்தம் 41 போ் மாநகர போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

அதே போல திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உத்தரவின்படி, சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.