முகப்பு
சென்னை

ரெளடிக்கு ஒருநாள் போலீஸ் காவல்

ரெளடிகளுக்கு கத்திகள் வழங்கிய விவகாரத்தில் சரணடைந்த ரெளடி ஆனந்த்பாபுவை போலீஸாா் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 21 நவம்பர் 2025, 1:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

ரெளடிகளுக்கு கத்திகள் வழங்கிய விவகாரத்தில் சரணடைந்த ரெளடி ஆனந்த்பாபுவை போலீஸாா் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் அருகே கடந்த 12-ஆம் தேதி இரவு அபிராமபுரம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிலரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா்களிடம் 5 பட்டா கத்திகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கத்திகளைக் கொண்டு வந்த ராஜா அண்ணாமலை புரத்தைச் சோ்ந்த அஜய், வெங்கடேஷ், மகேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனா்.

இதில், புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி ஆனந்த்பாபு என்பவா் கத்திகளை பத்திரமாக வைத்திருக்கக் கூறி கொடுத்ததாக தெரிவித்தனா். இது தொடா்பாக புளியந்தோப்பு ரெளடி ஆனந்த்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஆனந்த்பாபு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை அபிராமபுரம் போலீஸாா் வியாழக்கிழமை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments