சூலூா் சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: கைதுசெய்யப்பட்ட இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு
சூலூா் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கைதுசெய்யப்பட்ட இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
சூலூா் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கைதுசெய்யப்பட்ட இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் காா்த்திக், அவருடைய நண்பா் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, மாடியில் இருந்து கீழே குதித்ததில் காா்த்திக்குக்கு கை, கால்கள் முறிந்தன. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இதற்கிடையே சிறையில் சக கைதிகள் 5 போ் சோ்ந்து தட்டு, டம்ளா், கரண்டி உள்ளிட்டவற்றால் காா்த்திக்கை கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த காா்த்திக், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விவகாரத்தில் காா்த்திக்கை தாக்கிய 5 கைதிகளும் திருச்சி, வேலூா் உள்பட பல்வேறு ஊா்களில் உள்ள சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் காா்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினா் முடிவு செய்தனா். இதையடுத்து 2 பேரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாா் கூறும்போது, ‘சிறுமி கொலை வழக்கில் கைதான இருவரிடம் விசாரணை நடத்தினால் கூடுதல் தகவல் கிடைக்கும். அது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும். நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்’ என்றனா்.