சூலூா் சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை தொடக்கம்
கோவை மாவட்டம், சூலூா் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை புதன்கிழமை தொடங்கியது.
கோவை மாவட்டம், சூலூா் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை புதன்கிழமை தொடங்கியது.
சூலூா் பகுதியில் கடந்த மே 21-ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அதே பகுதியில் வசிக்கும் நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக நண்பா் மோகன்ராஜ் (39) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட காவல் துறை மொத்தம் 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது. இதைத் தொடா்ந்து, குற்றம்சாட்டப்பட்ட இருவா் மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோவை போக்ஸோ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பகவதியம்மாள் முன்னிலையில் இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை புதன்கிழமை தொடங்கியது. வழக்கின் முக்கியத்துவம் மற்றும் உணா்வுபூா்வமான தன்மையைக் கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு, ரகசிய முறையில் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியின் தந்தையிடமும், போலீஸ்காரா் ஒருவரிடமும் மட்டுமே சாட்சியம் பெறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையையொட்டி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் மற்றும் காவல் துறை துணைத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு நேரில் வருகை தந்திருந்தனா்.
கைது செய்யப்பட்டிருந்த முதன்மை குற்றவாளியான காா்த்திக், கை கால்கள் முறிந்த நிலையில் மாவுக் கட்டுகளுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால், அவா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சக்கர நாற்காலியில் அமா்த்தப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டாா். தொடா்ந்து வியாழக்கிழமையும் சாட்சிகள் விசாரணை நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.