முகப்பு
சென்னை

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி ஏடிஎம் காா்டு மோசடி: இளைஞா் கைது

சென்னையில் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து ஏடிஎம் காா்டு மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:28 PM
பகிர்:

சென்னையில் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து ஏடிஎம் காா்டு மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி பாண்டியன் (61). இவா், வேலை நிமித்தமாக சென்னை வந்தாா். கடந்த 31-ஆம் தேதி சென்னைப் பல்கலை. வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அங்கு வந்த நபா், பாண்டியனிடம் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி, ஏடிஎம் காா்டு மற்றும் பின் நம்பரை வாங்கி ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையை இட்டு, பணம் இல்லை என்று கூறி ஏமாற்றி, தான் வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் காா்டை கொடுத்து அனுப்பியுள்ளாா். பின்னா், பாண்டியனின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ.23,500-ஐ எடுத்தபோது, பாண்டியன் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.

இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிடாதாலா சுனில் (27) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கைப்பேசி, 79 ஏடிஎம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இகேபோல், பல்வேறு மாநிலங்களில் பாா்வையற்ற மாற்றுதிறனாளிகள், வயதானவா்களை ஏமாற்றி ரூ.20 லட்சம் வரை அபகரித்திருப்பதும் தெரிய வந்தது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments