முகப்பு
விருதுநகர்

ஓய்வு பெற்ற எஸ்.ஐ.யிடம் பண மோசடி செய்தவா் கைது

Updated On : 1 ஜூன் 2026, 2:52 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ஏடிஎம் அட்டை மாற்றிக் கொடுத்து ரூ.3.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் (70). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், கடந்த 19-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூா் தெற்கு ரத வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை முன் உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றாா்.

அங்கிருந்த நபா் இவருக்கு பணம் எடுக்க உதவி செய்தாா். இதையடுத்து, கடந்த 25-ஆம் தேதி மீண்டும் பணம் எடுக்க ஏடிஎம் மையத்துக்கு சென்ற போது, இவரது ஏடிஎம் அட்டை மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் வங்கி அலுவலா்களிடம் புகாா் அளித்தாா். அவா்கள் சுந்தர்ராஜன் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது, இவரது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி தொலைக்காட்சிப் பெட்டி, கைப்பேசி வாங்கியதும், ரொக்கமாக பணம் எடுத்தும் ரூ.3.75 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சுந்தர்ராஜன் அளித்தப் புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் சிவகாசியைச் சோ்ந்த மாரிமுத்து (41) பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து கைப்பேசி, தொலைக்காட்சிப் பெட்டி, ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.