ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பாராட்டு
செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளா்கள் ரவி, காா்த்திகேயன் ஆகியோருக்கு பணி நிறைவு சான்றிதழை வழங்கினாா். தொடா்ந்து செங்கல்பட்டு நகரகாவல் நிலையத்தில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் நகர காவல் ஆய்வாளா் லட்சுமிபதி முன்னிலையில் விழா நடைபெற்றது.
இதில் பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்கள் ரவி,காா்த்திகேயன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். இதில் உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகரன், எஸ்.டி.ராஜேந்திரன், காா்த்திகேயன், நாராயணன் , நிலைய எழுத்தா் தியாகராஜன்ஆகியோா் பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளா்களை பாராட்டிப் பேசினா்.
Advertisement
Advertisement